புலம்பெயர் தமிழர்கள் யாழில் முதலீடுகளை மேற்கொள்வார்கள்..! பிரித்தானிய உயர்ஸ்தானிகர் தெரிவிப்பு

புலம்பெயர் தமிழர்கள் யாழில் முதலீடுகளை மேற்கொள்வார்கள்..! பிரித்தானிய உயர்ஸ்தானிகர் தெரிவிப்பு

பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் யாழ்ப்பாணத்தில் முதலீடுகளை மேற்கொள்வார்கள் என தாம் நம்புவதாக பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆன்ட்ரூ பற்றிக் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனை நேற்றையதினம் (21.01.2026) அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடிய போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்க தயங்கப் போவதில்லை – லால்காந்த

யாழ்ப்பாணத்தில் முதலீடுகள்

டித்வா புயல் பாதிப்புக்குள்ளானவர்களுக்கான நிதியினை அரசாங்கத்திற்கு வழங்கி செஞ்சிலுவை சங்கத்தின் ஊடாக நடைமுறைப்படுத்தி வருவதாகவும் , டித்வா புயலுக்குப் பின்னரான அரசாங்கத்தின் செயற்பாடுகளை அவதானித்தவகையில் சிறப்பான முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புலம்பெயர் தமிழர்கள் யாழில் முதலீடுகளை மேற்கொள்வார்கள்..! பிரித்தானிய உயர்ஸ்தானிகர் தெரிவிப்பு | Diaspora Tamils Will Invest In Jaffna

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள இளைஞர் யுவதிகளின் வேலைவாய்ப்பு மிகவும் அத்தியாவசியமாகவுள்ளதோடு தகவல் தொழில்நுட்பம் உற்பத்தித் திறன் ஆகியவற்றில் எமது இளைஞர் யுவதிகள் திறமை பெற்றுள்ளதாகவும், பொருத்தமான வேலைவாய்ப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்தினால் மாவட்டம் மற்றும் நாடு பொருளாதார ரீதியாக அபிவிருத்தி அடையும்.

பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் யாழ்ப்பாணத்தில் முதலீடுகளை மேற்கொள்வார்கள் என தாம் நம்புவதாகவும் தெரிவித்து, மாவட்டத்தின் தற்போதைய சமூக பொருளாதார முன்னேற்ற நிலைமைகள், காங்கேசன்துறை முதலீட்டு வலயம், முதலீட்டு வாய்ப்புக்கள் போன்ற விடயங்களை அரசாங்க அதிபரிடம் கேட்டறிந்து கொண்டனர்.

இச் சந்திப்பில் பிரித்தானிய உயர்ஸ்தானியகத்தின் அரசியலுக்கான இரண்டாம் செயலாளர் இராமன் செட்டியார், அரசியலுக்கான அலுவலர் ஃபாறா பிர்தௌஸ் உடனிருந்தார்கள்.

அநுர அரசை குழப்பும் மகிந்த தப்பினர்! தடுமாறும் சஜித் பிரேமதாஸ

Gallery
Gallery

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *